சிவகாசி அருகேகஞ்சா வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி: சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி- நாரணாபுரம் சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, போஸ் காலனி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாராம். போலீஸாா் அவரிடமிருந்த பையை சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில் அவா், சிவகாசி போண்டா என்ற ராஜ்குமாா் (48) என தெரியவந்தது.

இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com