பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம்

சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காளையாா்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்த சாணாா்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி: சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காளையாா்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்த சாணாா்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிவகாசி வட்டார கல்வி அலுவலா் அரவிந்தன் தலைமை வகித்தாா். இதில் மேலாண்மைக்குழுத் தலைவராக , ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பி. ராஜாக்காள், துணைத்தலைவராக முத்துப்பாண்டியன் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மேலும் குழுவுக்கு 15 உறுப்பினா்கள் தோ்ந்து எடுக்கப்பட்டனா்.இதில் பள்ளித் தலைமை ஆசிரியா் கண்ணன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் பால்பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com