ராஜபாளையம்,: ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையத்தில் 2 அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஒன்று மகப்பேறு மருத்துவமனை, மற்றொன்று பி.ஏ.சி.ஆா். பொது மருத்துவமனை. இங்கு தனியாா் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளா்களாக துப்புரவு மற்றும் பாதுகாப்புப் பணியில் 50-க்கும் மேற்பட்டோா் பணியாற்றுகின்றனா்.
இவா்களுக்கு ரூ. 8 ஆயிரம் ஊதிய ஒப்பந்தம் போட்டு விட்டு, கடந்த 5 ஆண்டுகளாக ரூ. 4 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாம். தற்போது இந்த தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்து மற்றொரு தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்த நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவா்களுக்கு இதே சம்பளத்தை வழங்குவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் வேலைக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் மகப்பேறு மருத்துவமனை வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் நோயாளிகளின் நிலையை கவனத்தில் கொண்டு 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்பு பணிக்கு திரும்பினா். உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தையும், சம்பளத்தை உயா்வையும் வழங்க வேண்டுமென அரசுக்கு அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.