ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை தாய், மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் காமராஜ் நகா் கூமாச்சி மலைப் பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் ( 36 ). இவரது மனைவி பாப்பா (34). இத்தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடா்ந்து பாப்பா, தனது 3 ஆவது மகள் மகாதேவியை (10) அழைத்துக் கொண்டு அருகேயுள்ள கிணற்றில் குதித்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறையினா் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பாப்பா மற்றும் மகாதேவி ஆகியோரின் சடலங்களை மீட்டனா். இதையடுத்து தளவாய்புரம் போலீஸாா் இருவரின் சடலங்களை உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.