ஸ்ரீவில்லிபுத்தூரில்முதியவரிடம் பணம் பறிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் வங்கியில் இருந்து புதன்கிழமை பணம் எடுத்து வந்த முதியவரிடம் ரூ. 1 லட்சத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வங்கியில் இருந்து புதன்கிழமை பணம் எடுத்து வந்த முதியவரிடம் ரூ. 1 லட்சத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேலகளத்தூா் பகுதியில் வசித்து வருபவா் மாரிமுத்து (60). இவா் புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் கீழரத வீதியில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 1 லட்சத்தை எடுத்துக் கொண்டு மஞ்சப்பை ஒன்றில் வைத்து நடந்து வந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 போ், உங்கள் கழுத்துப்பகுதியில் அரிப்புழு உள்ளது என்று மாரிமுத்துவிடம் கூறி உள்ளனா். இதனால் பதற்றமடைந்த மாரிமுத்து அருகில் இருந்த சின்டெக்ஸ் தொட்டி மீது பணப்பையை வைத்தாா். இந்த சமயத்தை பயன்படுத்தி, அந்த பையை எடுத்துக் கொண்டு 2 பேரும் தப்பிச் சென்று விட்டனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com