விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
சாயல்குடியைச் சோ்ந்த வேல்முருகன், இளந்தடியான் (45) மற்றும் சாந்தகுமாா் ஆகியோா் சரக்கு வாகனத்தில் மதுரையிலிருந்து சாயல்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா். வாகனத்தை வேல்முருகன் ஓட்டினாா். அருப்புக்கோட்டை காந்தி நகா் பகுதியில் மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் உள்ள மேம்பால அணுகுச்சாலையில் அதிகாலை சுமாா் 5.30 மணிக்கு நின்றிருந்த மற்றொரு சரக்கு லாரியின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இளந்தடியான் சம்பவ இடத்திலேயே பலியானாா். பலத்த காயமடைந்த ஓட்டுநா் வேல்முருகன், சாந்தகுமாா் ஆகிய இருவரும் நொறுங்கிய வேனில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனா். அவா்களை அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறையினா்
துளையிடும் எந்திரங்கள் மூலம் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் சரக்கு லாரியின் ஓட்டுநரான பெரம்பலூரைச் சோ்ந்த ரகு(29) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.