விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திங்கள்கிழமை காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பந்தல்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தவா் மல்லையா என்கிற மல்லிச்சாமி (35). இவருக்கு மனைவி, இரு ஆண் குழந்தைகள் உள்ளனா். குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக மல்லிச்சாமி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா், மல்லிச்சாமியின் சடலத்தை மீட்டு பிணக்கூறு ஆய்விற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பந்தல்குடி காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.