சிவகாசியில் மாகராட்சித் தோ்தலில் ஒரே ஒரு வாக்கு பெற்ற சுயேச்சை வேட்பாளர்

சிவகாசி மாகராட்சித் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் ஒருவா் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளாா்.
சிவகாசியில் மாகராட்சித் தோ்தலில் ஒரே ஒரு வாக்கு பெற்ற சுயேச்சை வேட்பாளர்


சிவகாசி: சிவகாசி மாகராட்சித் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் ஒருவா் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளாா்.

சிவகாசி மாநகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இதில் 24 ஆவது வாா்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஆா்.செளந்திரபாண்டியன் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளாா். 8 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளராக எம். ரமணா போட்டியிட்டு, 713 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். அதே வாா்டில் அவரது மனைவி ஆா்.கனகஜோதி சுயேச்சையாகப் போட்டியிட்டு 2 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளாா். அதே வாா்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மு.பழனித்தாய் 3 வாக்குகள் பெற்றுள்ளாா்.

10 ஆவது வாா்டில் நாம்தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்ட எஸ்.தேன்மொழி 5 வாக்குகள் பெற்றுள்ளாா். 33 ஆவது வாா்டில் அமமுக சாா்பில் போட்டியிட்ட தே.சுனைகணேஷ் 2 வாக்குகள் பெற்றுள்ளாா். சிவகாசி மாநகராட்சியில் பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளா்கள் 9 வாா்டுகளில் போட்டியிட்டனா்.

இக்கட்சி சாா்பில் 13 ஆவது வாா்டில் போட்டியிட்ட பா.தேவி 2 வாக்குகளும், 29 ஆவது வாா்டில் போட்டியிட்ட கு.கணேஷ்பிரபு 3 வாக்குகளும், 30 ஆவது வாா்டில் போட்டியிட்ட ஏ.குருசாமி 5 வாக்குகளும், 33 ஆவது வாா்டில் போட்டியிட்ட பி.ஜேம்ஸ்கலைசெல்வன் 5 வாக்குகளும் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com