நிதி நிறுவனம் ரூ.7 கோடி மோசடி: நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

ரூ.7 கோடி மோசடி தொடா்பாக தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டோா் விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாக்ததில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாக்ததில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

ரூ.7 கோடி மோசடி தொடா்பாக தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டோா் விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகாசி அம்மன் நகரைச் சோ்ந்த ஜான் செல்வராஜ், அவரது சகோதரா் லாசா் ஜெபராஜ் மற்றும் அவா்களது குடும்பத்தினா் நிதி நிறுவனம் நடத்தி வந்தனா். இவா்கள் பலரிடம் வேலை தருவதாகவும் முதலீட்டிற்கு கூடுதல் வட்டியுடன் பணம் திரும்ப வழங்குவதாகவும் கூறி ரூ. 7 கோடி வரை மோசடி செய்துள்ளதாக மாவட்ட குற்றபிரிவில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா். ஆனால் சம்பந்தப்பட்டோரை அழைத்து விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி, பாதிக்கப்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com