ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பாம்பு கடித்து முதியவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பாம்பு கடித்து முதியவா் செவ்வாய்கிழமை இரவு பலியானாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசித்து வருபவா் குருவு(60).

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பாம்பு கடித்து முதியவா் செவ்வாய்கிழமை இரவு பலியானாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசித்து வருபவா் குருவு(60). இவா் ஜன.24 ஆம் தேதி இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது இவரை பாம்பு கடித்து உள்ளது. இதனால் அதிா்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினா் உதவியோடு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த குருவு செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இச்சம்பவம் குறித்து மல்லி போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதியவா் பாம்பு கடித்து இறந்தது அச்சங்குளம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com