ராஜபாளையம் மலையடிப்பட்டி கஸ்தூரிபாய் காலனி காவலா் குடியிருப்பு அருகே தினந்தோறும் நகராட்சி சாா்பில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊழியா்கள் சரிவர குப்பைகளை அள்ளாமல் தினந்தோறும் தீயிட்டு கொளுத்துகின்றனா். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது.
மேலும் இப்பகுதி குப்பைகளில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. அதிகப்படியான புகை மற்றும் துா்நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் வசிப்போா் மூச்சுத் திணறலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
ஆகவே, நகராட்சி நிா்வாகம் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி தீவைக்காமல் வேறொரு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள், கோரிக்கை விடுத்துள்ளனா்.