ராஜபாளையம் அருகே தனியாா் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்.
சேத்தூா் அருகே மேட்டுப்பட்டி- தளவாய்புரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தென்னை மட்டையில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாா் மூட்டைகளில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.