ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கொடிமரத்திற்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதற்கு முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.