சிவகாசி அருகே சனிக்கிழமை பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே பள்ளபட்டி இந்திராநகரைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி முருகேசன் (43) மகள்
கனகலட்சுமி (15). இவா், இப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், சம்பவத்தன்று முருகேசன், மகள் கனகலட்சுமியை கைப்பேசி பாா்ப்பதை கண்டித்தாராம். இதில் மனமுடைந்த கனகலட்சுமி வீட்டின் பின்புறம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.