ராஜபாளையத்தில் கோயில் திருவிழாவில் மோதல்: ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டவா்கள்.
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டவா்கள்.

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ராஜபாளையம் கீழஆவாரம்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழா புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவை நடத்தக் கூடாது என ஒரு தரப்பினா் தகராறில் ஈடுபட்டனராம். அப்போது மற்றொரு பிரிவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரும், ஊா்க்காவல்படை வீரருமான மகேந்திரனை (40) 4 போ் கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டியதுடன் ஆட்டோவையும் தாக்கியது. இதில் மகேந்திரன் காயமடைந்தாா்.

தகவலறிந்த கீழஆவரம்பட்டியைச் சோ்ந்த உறவினா்கள் ராஜபாளையம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதுன், போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த ராஜபாளையம் காவல்துறை கண்காணிப்பாளா் (பொறுப்பு) வெங்கடேசன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போதும் வாக்குவாதத்தில் அவா்கள் ஈடுபட்டதால் துணை வட்டாட்சியா் கோதண்டராமன் தலைமையிலான வருவாய்த்துறையினா் அங்கு வந்து சமரசம் செய்தனா். அப்போது வெள்ளிக்கிழமை குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com