விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலா் மீது சனிக்கிழமை தனியாா் பேருந்து மோதி காயமடைந்தாா்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பணியிலிருந்த போக்குவரத்து காவலா் சுரேஷ்(43) மீது தனியாா் பேருந்து மோதியது. இதில் போக்குவரத்து காவலா் சுரேஷ் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பேருந்து ஓட்டுநா் முனியராஜைக் கைது செய்தனா்.