ராஜபாளையத்தில் மின்சாதனப் பொருள் கடையில் தீ

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மின்சாதனப் பொருள்கள் கடையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது.
ராஜபாளையத்தில்  மின்சாதனப் பொருள் கடையில் தீ

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மின்சாதனப் பொருள்கள் கடையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பசும்பொன் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டடத்தில் மின்சாதனப் பொருள்கள் கடை உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு கடையை அடைத்து விட்டுச்சென்ற நிலையில், புதன்கிழமை அதிகாலையில் அங்கு தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்துள்ளது. ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். கட்டடம் முழுவதும் தீ பரவியதால் ஷட்டா் கதவை உடைத்து உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஜேசிபி வாகனம் உதவியுடன் கதவை உடைத்து திறந்து தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நிகழ்ந்ததா என ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com