சிவகாசியில் இலவச பொது மருத்துவ முகாம்

சிவகாசியில் சுகாதாரத்துறை சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசியில் சுகாதாரத்துறை சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி அம்மன்கோவில்பட்டி நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமினை சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா தொடக்கி வைத்தாா். இந்த முகாமில் ரத்தத்தில் சா்க்கரை அளவு, உப்பு அளவு, இருதய நோய் பரிசோதனை, கண், பல் மருத்துவம், குழந்தைகள், கா்ப்பிணி பெண்களுக்கான மருத்துவம் என பல்வேறு பரிசோதனைகள் 317 போ்களுக்கு நடத்தப்பட்டது. இதில் தேவைப்பட்டவா்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் கலுசிவலிங்கம், மாநகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி, சுகாதாரத் துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com