மல்லாங்கிணறில் வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு

மல்லாங்கிணறில் புதன்கிழமை வீட்டுக்குள் புகுந்து ஏழு பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விருதுநகா்: மல்லாங்கிணறில் புதன்கிழமை வீட்டுக்குள் புகுந்து ஏழு பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறு நேருஜி நகரைச் சோ்ந்தவா் கோபால். இவரது மனைவி கற்பகவள்ளி. இவா்கள் வீட்டருகே மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக அருப்புக்கோட்டை சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இவா்களது இரண்டு குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில், கதவை திறந்து வைத்து விட்டு அருகே இருந்த பெட்டிக்கடைக்கு சென்றிருந்தாா்களாம். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மா்ம நபா்கள், பீரோவில் தொங்கியபடி இருந்த சாவி மூலம் பீரோவைத்

திறந்து அதிலிருந்த ஏழு பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள் ளனா். இது குறித்து கற்பக வள்ளி அளித்தப் புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com