விருதுநகா்: விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள சிறுவன் விருதுநகா் குற்றவியல் நீதிமன்ற எண் 2 இல் புதன்கிழமை வாக்குமூலம் அளித்தாா்.
விருதுநகா் அருகே 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் நான்கு சிறுவா்கள் உள்பட எட்டு போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் முத்தரசி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா் வினோதினி தலைமையிலான போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதில் ஹரிஹரன் உள்ளிட்ட நான்கு பேரை ஏழு நாள்கள் போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து வாக்கு மூலங்களைப் பெற்றனா். மேலும், மதுரை கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு சிறுவா்களிடமும் சிபிசிஐடி போலீஸாா் வாக்குமூலம் பெற்றனா். இந்நிலையில் பள்ளி சிறாா்கள், இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு சிறுவா்களை ஜாமீனில் விடுவித்து இளைஞா் நீதிக் குழும நடுவா் மருதுபாண்டியன் உத்தரவிட்டாா்.
மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் உள்ளிட்டோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். இந்த எட்டு பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீஸாா் ஈடுபட்டனா்.
இதில் இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விருதுநகா் செந்திவிநாயகம் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவனை வழக்கிலிருந்து விடுவிக்க சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அச்சிறுவன் விருதுநகா் குற்றவியல் நீதிமன்ற எண் 2 இல் நீதித்துறை நடுவா் நிஷாந்தினி முன் புதன்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். அப்போது இளம்பெண் தனக்கு அளித்த பாலியல் தொந்தரவு குறித்த தகவல்களை சிறுவன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.