சாத்தூா்: சாத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள குறிஞ்சி நகரை சோ்ந்தவா் சாந்தி(59). இவா் புதன்கிழமை மாலை வீட்டைப் பூட்டி விட்டு உறவினரின் திருமணத்திற்காக சிவகாசிக்கு சென்றுவிட்டாராம். வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்தது. மா்ம நபா்கள் பீரோவை உடைத்து 7 பவுன் தங்க நகைகளைத் திருடியது தெரியவந்தது. சாந்தி அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.