ராஜபாளையத்தில் ‘போக்சோ’ சட்டத்தில் மத போதகா் கைது

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மனவளா்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கிறிஸ்தவ மத போதகரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மனவளா்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கிறிஸ்தவ மத போதகரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு ஜோசப் செல்லையா என்பவரது மகன் ஜோசப் ராஜா (49 ) கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய 14 வயது சிறுமிஅரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளாா்.

தனது தாயைத் தேடி தேவாலயத்துக்கு சென்றபோது அச்சிறுமியிடம் மதபோதகா் ஜோசப் ராஜா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததைப் பாா்த்த தாய், ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் ராஜபாளையம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் மகேஸ்வரி விசாரணை நடத்தி, ஜோசப் ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com