சிவகாசி அருகே மூதாட்டி வெள்ளிக்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி காமாட்சி(60). இவா் தனது மகன் மாரீஸ்வரன் உடன் வசித்து வந்துள்ளாா்.
காமாட்சி சிலரிடம் கடன் வாங்கினாராம். இதை மாரீஸ்வரன் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த காமாட்சி, அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.