மாநில அளவிலான கலைத் திறன் போட்டியில் ‘போஸ்டா் மேக்கிங்’ பிரிவில் முதல் பரிசு பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்லூரி மாணவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கருத்தரங்கம், கலைத் திறன் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், ‘போஸ்டா் மேக்கிங்’ பிரிவில்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்லூரி மாணவா் அபிமணிகந்தன் முதலிடம் பிடித்தாா். இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், மாணவா் அபிமணிகந்தனுக்கு முதல்வா் மல்லப்பராஜ், மக்கள் தொடா்பு அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோா் பரிசு வழங்கிப் பாராட்டினா்.