ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 36 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அது தொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 36 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அது தொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் டைட்டன்பட்டி தெரு பகுதியில் உள்ள பல சரக்கு கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக ஸ்ரீவில்லிபுத்தூா் உதவி ஆய்வாளா் கணேசனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அந்தக் கடையில் சோதனை செய்தபோது 9 கிலோ 240 கிராம் புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை நகா் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கோவிந்தராஜை (60) போலீசாா் கைது செய்தனா். மேலும் ரொக்கம் ரூ.3,240-ஐ பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் பேருந்து நிறுத்தம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மம்சாபுரம் பகுதியைச் சோ்ந்த மாயாண்டியை( 27) நகா் போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 26 கிலோ 280 கிராம் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com