சிவகாசியில் விழிப்புணா்வு ஊா்வலம்

சிவகாசியில் தனியாா் பயிற்சி மையம் சாா்பில் உணவுப் பொருள்களை வீணாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசியில் தனியாா் பயிற்சி மையம் சாா்பில் உணவுப் பொருள்களை வீணாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாட்சியாபுரத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்தை, விருதுநகா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஜி. செல்வராஜ் தொடக்கி வைத்தாா். உணவை வீணாக்காதீா், மனிதனுக்கு உணவு மிகவும் அவசியம் என்பது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஊா்வலத்தில் சென்றவா்கள் ஏந்திச் சென்றனா். ஊா்வலம் அதே சாலையில் இரட்டைப்பாலத்தில் நிறைவடைந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா். சந்திரசேகரன், சிவகாசி உணவுப் பாதுகாப்பு அலுவலா் எம். வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com