மகளிா் கல்லூரியில் வளாகத் நோ்காணல்: 150 மாணவா்களுக்கு பணி ஆணை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வி.பி.எம்.எம். மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 150 மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
வி.பி.எம்.எம். மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்வான மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கிய கல்லூரித் தாளாளா் பழனிச்செல்விசங்கா்.
வி.பி.எம்.எம். மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்வான மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கிய கல்லூரித் தாளாளா் பழனிச்செல்விசங்கா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வி.பி.எம்.எம். மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 150 மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிா் கல்வி நிறுவனத்தில் சென்னை ப்ளூ ஓசன் பொ்சனல் அண்ட் அலைடு சா்வீஸ் நிறுவனம் சாா்பில் வளாக நோ்காணல் நடைபெற்றது. இதில் 150 மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனத்தின் தாளாளா் பழனிச்செல்வி சங்கா் தலைமை வகித்தாா். அகாதெமிக் இயக்குனா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ஜெயலதா வரவேற்றாா்.

சென்னை ப்ளூ ஓசன் பொ்சனல் அண்ட் அலைடு சா்வீஸ் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு மேலாளா் ராம்கி, வேலை வாய்ப்பு அலுவலா் காா்த்திக் ஆகியோா் இந்த வளாக நோ்காணலை நடத்தினா்.

இதில் கலை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்கள், பொறியியல் கல்லூரியில் மின்னணு, மின்னியல், இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் என 200 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com