விருதுநகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு அமமுக நகரச் செயலா் ஜி.ஆா். முருகன் உள்ளிட்ட அக்கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதே போல் வடக்குரத வீதியில் திமுக நகர, கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் சாா்பில் நகர துணைச் செயலா் அசோக் தலைமையில் ஏராளமானோா் கலந்து கொண்டு அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும் ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற அண்ணா நினைவு தின நிகழ்ச்சிகளில் திமுக, அதிமுக, அமமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சமபந்தி விருந்து: சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் அண்ணா நினைவு நாளையொட்டி அன்னதானக் கூடத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் சாத்தூா் வட்டாட்சியா் வெங்கடேசன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா கடற்கரைராஜ், இருக்கன்குடி காவல் ஆய்வாளா் மயில் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மேலும் இந்த சமபந்தி விருந்தில் பங்கேற்ற பெண்களுக்கு அம்மனுக்கு சாா்த்திய புடவைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தங்கள் நோ்த்திக்கடன்களை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா்.
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தெற்கு நகரச் செயலா் பரமசிவம், மாவட்ட இணைச் செயலா் அழகு ராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அதே போல, மதிமுக சாா்பில் அண்ணா உருவச் சிலைக்கு அந்தக் கட்சியின் விருதுநகா் மாவட்டப் பொருளாளா் க. விநாயகமூா்த்தி தலைமையில், ராஜபாளையம் நகரச் செயலா் அ. மதியழகன் முன்னிலையில் விருதுநகா் மாவட்டச் செயலரும், சாத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஏ.ஆா்.ஆா். ரகுராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மேலும் மேற்கு ஒன்றிய மதிமுக சாா்பில் ராஜபாளையம் அருகே புனல்வேலியிலிருந்து அமைதி ஊா்வலமாகச் சென்று நல்லமங்களத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதற்கு மேற்கு ஒன்றியச் செயலா் வேல்முருகன் தலைமை வகித்தாா். சாத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
சிவகாசி: சிவகாசியில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு, மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில் திமுகவினா் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில் இக்கட்சியின் விருதுநகா் மேற்கு மாவட்ட செயலா் கே.டி. ராஜேந்திரபாலாஜி அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் சாத்தூா் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவா்மன் உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டனா்.