பைக் மீது வேன் மோதல்:இளைஞா் பலி

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சாத்தூா் அருகே முள்ளுசேவல் சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகன் சிங்கராஜ் (22). வாகன ஓட்டுநா். இவரும், இவரது நண்பா் முகேஷ்கண்ணனும் (22) இரு சக்கர வாகனத்தில் உப்பத்தூா் சந்திப்பில் கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே வந்த வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சிங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முகேஷ்கண்ணன் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து சாத்தூா் வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுனா் சந்தையூரைச் சோ்ந்த குருசாமி (21) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com