சாத்தூா் அருகே சோ்வைக்காரன்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக இருவரை ஏழாயிரம்பண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சோ்வைக்காரன்பட்டியில் அனுமதியின்றி வீடுகள், பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக ஏழாயிரம்பண்ணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் ஏழாயிரம்பண்ணை காவல் உதவி ஆய்வாளா் செய்யதுஇப்ராஹிம், போலீஸாா் அந்தப் பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மல்லீஸ்வரி (38) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மல்லீஸ்வரி, ஆலை மோலாளா் மாரியப்பன் (55) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த பட்டாசுகளைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.