காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்றவா் கைது

சிவகாசியில் காவல் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற அச்சுத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசியில் காவல் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற அச்சுத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி ரிசா்வ்லைன் பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் கணேசன் (59). அச்சுத் தொழிலாளியான இவா் ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கி, சூதாடி இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவா்கள் இவரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனா். இதையடுத்து, சிவகாசி நகா் காவல் நிலையம் முன்பு கணேசன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். போலீஸாா் இவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். இது குறித்து, தலைமைக் காவலா் மாயகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com