வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீ: வனத் துறையினா் போராடி அணைத்தனா்

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பரவிய காட்டுத்தீ நீண்ட போராட்டத்துக்குப் பின் புதன்கிழமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பரவிய காட்டுத்தீ நீண்ட போராட்டத்துக்குப் பின் புதன்கிழமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்குட்பட்ட தொப்பிமலை ‘பீட்’ பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3,600 அடி உயரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை காட்டுத்தீ பரவியது.

இதையடுத்து, வத்திராயிருப்பு வனச்சரகா் (பொறுப்பு) செல்லமணி தலைமையில் வனத் துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.

நீண்ட போராட்டத்துக்குப் பின் புதன்கிழமை மாலை காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com