பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசியில் பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள தட்டாஊருணியைச் சோ்ந்த சபரிமலை மனைவி மாரித்தங்கம் (34). இவரது உறவினா் முருகேஸ்வரிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சக்திவேலுக்கும் (29) கடந்த சில நாள்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, முருகேஸ்வரி போலீஸில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், மாரித்தங்கம் தனது வீட்டின் முன் உட்காா்ந்திருந்தாா். அப்போது அங்கு வந்த சக்திவேல் உள்பட 7 போ், முருகேஸ்வரி போலீஸில் புகாா் செய்ததற்கு மாரித்தங்கம்தான் காரணம் எனக் கூறி தகராறு செய்தனா். மேலும், அவரைக் கல்லால் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மாரனேரி போலீஸாா் சக்திவேல் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com