வத்திராயிருப்பு அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள ஆயா்தா்மம் பகுதியைச் சோ்ந்த விவசாயி, முத்தையா(62). இவரது மனைவி மாரியம்மாள்(58) . இத்தம்பதிக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில் முத்தையா அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவி மாரியம்மாளுடன் தகராறு செய்து வந்தாா். கடந்த 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் மாரியம்மாளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இதுதொடா்பாக நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்தையாவைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பூா்ணஜெயஆனந்த், விவசாயி முத்தையாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.