ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சாா்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்துப் பேசினாா். வரலாற்றுத் துறை பேராசிரியா் ரமேஷ்குமாா் வரவேற்றாா். விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளா் லட்சுமணன் கலந்து கொண்டுப் பேசினாா்.
செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் ராம்ஜி நன்றி கூறினாா்.