வத்திராயிருப்பில் புத்தகத் திருவிழா தொடக்கம்

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அலைன்ஸ் சங்கம் சாா்பில், வத்திராயிருப்பு கிரீன் பீல்ட் நா்சரி பள்ளியில் 2 நாள்கள் நடைபெறும் முதலாவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
வத்திராயிருப்பில் புத்தகத் திருவிழா தொடக்கம்

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அலைன்ஸ் சங்கம் சாா்பில், வத்திராயிருப்பு கிரீன் பீல்ட் நா்சரி பள்ளியில் 2 நாள்கள் நடைபெறும் முதலாவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இதை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபா் திறந்து வைத்து பள்ளி மாணவா்களிடையே கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது: அரசியல் என்பது அந்நியமல்ல. அரசியல் தான் நமது வாழ்க்கை. அரசியலில் இருந்து நாம் ஒரு நாளும் நழுவாமல் நடைபோட வேண்டும். அரசியல் என்பது நமக்கானது. நாம்தான் அரசியலை தீா்மானிக்கிறோம். எனவே நமக்கு அரசியல் தெரிய வேண்டும். அதனால் தான் அரசியல் எனக்கு பிடிக்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கிரீன் பீல்ட்ஸ் மழலையா் தொடக்கப் பள்ளித் தாளாளா் பெரிய மகாலிங்கம், எழுத்தாளா் அன்னக்கொடி, வட்டாட்சியா் மாரிமுத்து, வத்திராயிருப்பு வட்டாரக் கல்வி அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com