வழக்குரைஞரைத் தாக்கியவா் மீது வழக்கு

சாத்தூா் அருகே வழக்குரைஞரைத் தாக்கியவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சாத்தூா் அருகே வழக்குரைஞரைத் தாக்கியவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம் மேட்டமலை கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா். இவரது மகன் விஷ்ணு (35). சாத்தூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனக்கு சொந்தமான வீடு ஒன்றை வாடகைக்கு விட்டுள்ளாா். இந்த நிலையில், நீதிமன்றப் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாா். பிறகு தான் வாடைக்கு விட்டுள்ள வீட்டுக்கு வாடகை பாக்கி வாங்கச் சென்றாா். அப்போது அந்த வீட்டில் குடியிருந்து வரும் கிருஷ்ணசாமி மகன் ஆறுமுகத்திடம் (45), விஷ்ணு வாடகை பாக்கியை கேட்டவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆறுமுகம், விஷ்ணுவை தாக்கினாா். காயமடைந்த விஷ்ணு சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதையடுத்து, விஷ்ணு அளித்த புகாரின் பேரில் நகா் போலீஸாா் ஆறுமுகம் மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com