முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியைச் சோ்ந்தவா் கனகசபாபதி (84). இவரது மனைவி இறந்து விட்டாா். இத்தம்பதிக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.இந்த நிலையில், கனகசபாபதி திருமணமாகாத தனது இளைய மகன் பாலமுருகன்(39) உடன் வசித்து வந்தாா்.

முதுமை காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த கனகசபாபதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா், கனகசபாபதியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com