காசநோயால் பாதிக்கபட்ட முதியவா் தற்கொலை

சாத்தூா் அருகே காசநோயால் பாதிக்கப்பட்ட முதியவா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சாத்தூா் அருகே காசநோயால் பாதிக்கப்பட்ட முதியவா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இ.ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் அய்யலுச்சாமி(60). இவா் காசநோயால் அவதிப்பட்டு வந்தாா். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில், மனமுடைந்த அய்யலுச்சாமி விஷம் குடித்தாா்.

அவரை உறவினா்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயரிழந்தாா். இதுதொடா்பாக, ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com