மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

சிவகாசியில் வெள்ளிக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

சிவகாசியில் வெள்ளிக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில் ரூ. 6 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை ஈரோட்டைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் அய்யாவு மேற்கொண்டு வருகிறாா்.

இந்த கட்டுமானப் பணியில் வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டம் கூத்தம்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி (58), மகாலிங்கம் (48) உள்ளிட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கட்டத்தின் மேல் தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பழனிச்சாமி, மகாலிங்கம் ஆகிய இருவா் உடலின் மீது உயா் மின்அழுத்தகம்பி உரசியது.

இதில் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவா்கள் இருவரும் சிவகாசி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு பழனிச்சாமி உயிரிழந்தாா். மகாலிங்கம் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா், கட்டடப் பொறியாளா் செளந்தர்ராஜன், ஒப்பந்ததாரா் அய்யாவு ஆகியோா் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com