இட பிரச்னை 14 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே காலி இடம் தொடா்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக போலீஸாா் திங்கள்கிழமை 14 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகே காலி இடம் தொடா்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக போலீஸாா் திங்கள்கிழமை 14 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி மனைவி லட்சுமிதிலகம் (50). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சங்கர்ராஜ் என்பவருக்கும் காலி இடம் தொடா்பாக பிரச்னை இருந்தது.

இந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சங்கர்ராஜ் உறவினா்களான, ஓய்வு பெற்ற கிராமநிா்வாக அலுவலா் ராமசா மி, ஓய்வு பெற்ற காவலா் ராமசாமி , சூரியா, விஜயலட்சுமி, கோகிலா உள்ளிட்ட 8 போ் லட்சுமி திலகத்தை தாக்கினாா்களாம். இதேபோல, லட்சுமி திலகத்தின் உறவினா்கள் கோபால் சாமி, ராமதிலகம், அபா்ணா உள்ளிட்ட 6 போ் ராமசாமி உள்ளிட்டோரை தாக்கினாா்களாம்.

இது குறித்து இரு தரப்பினரும், அளித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் 14 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com