சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அனுப்பன்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடிமின்னலுடன் மழை பெய்தது. அப்போது , அனுப்பன்குளம் கிராமத்தில் சேவுகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.