அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியில் மாணவா்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பழைய புத்தகத்தை மாற்றி விரும்பிய வேறு புத்தகத்தைப் பெறும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் பழைய புத்தகத்தை மாற்றி விரும்பிய வேறு புத்தகத்தைப் பெற்றனா். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) எஸ்.பாண்டியராஜன், துணை முதல்வா் பி.ரவிக்குமாா், நூலகா் எம்.ராஜவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி முதல்வா் ( பொறுப்பு) எஸ்.பண்டியராஜன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். கல்லூரி நூலகா் எம்.ராஜவேல் நன்றி கூறினாா். இதில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நூலகா் ராஜவேல், நூலகத் துறைப் பணியாளா்கள் கே.ஜெயகுரு நாராயணன், மகாதேவி ஆகியோா் செய்திருந்தனா்.