அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:

விருதுநகா், தென்காசி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com