விருதுநகர்
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே உள்ள துரைசாமிபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (33). கட்டடத் தொழிலாளியான இவா், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து அவரது மனைவி கல்பனாவுடன் தகராறு செய்து வந்தாா்.
புதன்கிழமை இவா் மது அருந்திவிட்டு வந்ததை கல்பனா கண்டித்தாா். இதனால், மன வேதனையில் இருந்த ரமேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.