ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தென்காசி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி ஸ்ரீவில்லிபுத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடந்த முறை வெற்றி பெற்ற திமுக மக்களவை உறுப்பினா் தென்காசி தொகுதிக்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. இந்தத் தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வெற்றி பெற்றவா்கள் எவரும் தங்களது கடமையை சரியாகச் செய்யாததால், இந்தப் பகுதி தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது.

வாக்குப் பதிவு தொடங்க இன்னும் 36 மணி நேரம் மட்டுமே உள்ளதால், தென்காசி மக்களவைத் தொகுதியில் வளா்ச்சியைக் கொண்டுவரவும், முன்னேற்றம் காணவும் இரட்டை இலைக்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com