விருதுநகர்
பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130-ஆவது பிறந்தநாள் விழா
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ராம்கோ நிறுவனா் பி.ஏ.சி ராமசாமி ராஜாவின் 130-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பி. ஏ.சி.ஆா்.நினைவிடத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், சொக்கா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து, நினைவு தொடா் ஜோதியை ராம்கோ குழும தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா வழங்கினாா்.
பின்னா், ராமமந்திரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் தென்காசி சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் அக்கரை சகோதரிகளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்தனா்.