விருதுநகர்
பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பூ மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தில் அமைந்துள்ள பூ மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழித் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, நாள்தோறும் அம்மன் கண்ணாடி சப்பரம், பூத வாகனம், பூச்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, காலையில் கோயிலில் சிறப்பு யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பூக்குழித் திடலில் தீ வளா்க்கப்பட்டது.
இதையடுத்து, பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடனை நிறைவேற்றினா்.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.