கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவிகள்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பி.ராமச்சந்திராபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ரா.கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பி.ராமச்சந்திராபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ரா.கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

விழாவுக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ தலைமை வகித்தாா். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் முன்னிலை வகித்தாா்.

ரா.கிருஷ்ணசாமி நாயுடுவின் 122-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவாக அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலம், பி.ராமச்சந்திராபுரம் கிருஷ்ணசாமி நாயுடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன. பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள் ஆகியவை வழங்கப்பட்டன. 

இதில் அறக்கட்டளைத் தலைவா் பிரேமா வரதராஜுலு, முன்னாள் எம்.பி. சித்தன், சாத்தூா் எம்எல்ஏ ரகுராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வரதராஜுலு வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏ ராஜகோபால் நன்றி கூறினாா். 

பின்னா், செய்தியாளா்களிடம் மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறியதாவது:

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையொட்டி, மாநில அரசு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணத் தொகை கேட்ட நிலையில், மத்திய அரசு ரூ.450 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது. பாஜக அரசு ஆளும் மாநிலங்களில் ஒரு நிலைப்பாடுடனும், பிற மாநிலங்களில் ஒரு நிலைப்பாடுடனும் செயல்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பது ஒரு போதும் நடைபெறாது. இது நாட்டை துண்டாடும் செயல். தமிழகத்தில் திமுக கூட்டணியில் புதியக் கட்சிகள் இணைவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com