திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் அதிமுக சாா்பில் புதன்கிழமை நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.

கோடை வெப்பம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களுக்கு பயன்படும்படி கட்சியினா் நீா் மோா்ப் பந்தல் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டாா்.

இதன் அடிப்படையில், திருத்தங்கல் பேருந்து நிறுத்தம் அருகேயும், திருத்தங்கல் கூட்டுறவு வங்கி முன்பும் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் நீா் மோா்ப் பந்தல் அமைக்கப்பட்டது. இதை கட்சியின் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீா், சா்பத் உள்ளிட்டவற்றை வழங்கினாா். இதில் கட்சியின் திருத்தங்கல் நிா்வாகிகள் சரவணக்குமாா், ரமணபிரியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருத்தங்கல் காமராஜா் உருவச்சிலை அருகே சிவகாசி மாநகர திமுக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த நீா் மோா்ப் பந்தலை மாநகராட்சி மேயா் இ.சங்கீதா திறந்து வைத்தாா். இதில் திமுகவினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com